×

அரியலூர் சாலையோரங்களில் மரக்கன்று நடும் பணி மும்முரம்

அரியலூர், நவ. 29: அரியலூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் உத்தரவின்படி மகிழம், வேம்பு, நாவல், அரசு, ஆலம் ஆகிய 10 அடி உயரமுள்ள மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதுவரை அரியலூர்- அயனாத்தூர் சாலை, பெரம்பலூர்- மானாமதுரை சாலை, கீழப்பழூர்- திருமழப்பாடி சாலை ஆகியவற்றில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.தற்போது மழை காலமாக உள்ளதால் 10 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் விரைவில் வளரும் என்பதால் மேலக்கருப்பூர்- வடுகபாளையம் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் மேற்பார்வையில் இளநிலை பொறியாளர்கள் ராஜா மற்றும் எழிலரசன், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Ariyalur road ,
× RELATED பெரம்பலூரில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு வலை